செவ்வாய், 25 செப்டம்பர், 2012

நான் சுவாசித்த மண்ணும் மக்களும்.

இது என்னோட முதல் பதிவு .


இதை ஒரு சுவாரஸ்யமான பதிவாக கொடுக்க முயற்ச்சிக்கிறேன். இப்போது நான் உங்களை ஒரு அருமையான , அழகான கிராமத்திற்கு அழைத்துச் செல்கிறேன். ராமநாதபுரம்  மாவட்டம்தா, கிளியூர் தான்  என் பூர்வீகம். சாலை முழுதுமே , கருவேல மரங்களும், பனை மரங்களும் தான் இருக்கும்.

நகரத்திற்கும் கிராமத்திற்கும் இருக்கும் உறவை இணைக்கும் தொப்புள் கொடி போல் இருக்கும் சாலை, காலை, மாலையென இரு நேரம் மட்டுமே  நகர் பேருந்து நடைபயணம் செல்லும்.



காலை விடிந்ததும்  நான் கண்ணைக் கசக்கிக்கொண்டு வீட்டை விட்டு வெளியில் வரும்போது, ஒவ்வொரு வீட்டுப்  பெண்களும் மாட்டு சாணத்தால் வாசல் தெளித்துக்கொண்டிருப்பார்கள், அதனால் தானோ? என்னவோ இவர்கள் வீட்டு பக்கம் நோய் நொடிகள் எட்டிப் பார்ப்பதில்லை.

உழவர்கள் ஏர் கலப்பை   சுமந்துகொண்டும், கயிறு திரிக்கவும், விவசாய வேலை பார்க்கவும் செல்லும் பெண்கள் கையில் ஒரு தூக்கு வாளியுடனும் தோளில் சுருமாட்டுத் துண்டுடனும் செல்வார்கள்.

சில பெண்கள் இடுப்பிலும், தலையிலும் தண்ணீர்க் குடம் கொண்டு செருப்பில்லக் கால்களுடன் நடந்து வரும்போது, கால் கொலுசு ஓசை இளையராஜாவின் இசையை விட இனிமையானது.

காலை உணவு கட்டாயம் வேண்டுமென்று இரவின் வறுமை உணர்த்தியதால் கடன் வாங்கிய நெல்லும், கேழ்வரகும் உரலுக்கும் உலக்கைக்கும் இடையில் மாட்டிகொண்டு தவியாய் தவிக்கும். உஸ் உஸ் என்னும் உரத்த குரலுடன்.

உலக்கைச் சத்தம் தினந்தோறும் ஏதாவது ஒரு வீட்டில் கேட்டுக்கொண்டுதான் இருக்கும்.

உழுத புழுதி மண்ணை இருண்ட மேகத்துடன் மழை துளிகள் மெல்ல மெல்ல நனைக்கும் போது, என் கிராமத்து மண்ணின் மனம் இதுவரை எந்த ஒரு வாசனை திரவியத்திலும் இல்லை. மழைவருது என்று ஊருக்கே தகவல் கொடுக்கும் சிறு குழந்தைகள், அடேய் மழைவருது சாக்கை எடுத்துட்டு வா... இப்படி ஊரே பரபரப்பாகிவிடும். விரித்த நெல்லும் காயவிடாமல் பண்ணுதே இந்த மேகம் என்று புலம்பல் ஒருபக்கம், வந்த மழை காற்றோடு போயிருச்சே என்று புலம்பலும் ஒருபக்கம்,


உறவுகள் எல்லாம் ஒன்றுகூடி ஒரு நாளைக்கு ஒருவரின் வயல்களில் களைபறிக்கும் அழகைக் காணும்போது எறும்பும் இவர்களைப் பாத்துக் கத்துகொன்டதோ? என்று நினைக்கத் தோன்றும். அவ்வளவு ஒற்றுமையும் சுறு சுறுப்பும் அவர்களிடம் இருக்கும்.


வயல் வெளிகளில் எங்காவது ஒரு வேப்பமரம் இருக்கும், அந்த மரத்தின் நிழலில் மதியம் உணவு இடைவேளையில் எல்லோரும் ஒன்று கூடி கொண்டுவந்த கஞ்சிக்கு இரண்டு வெங்காயம், ஒரு பச்சை மிளகாய், ஒரு புளி இதை எல்லாத்தையும் கொஞ்சம் நீர் விட்டு பிசைந்து கொள்வார்கள், இதுதான் இவர்களின் மிக சிறந்த உணவு. இந்த உணவின் ருசியை வேறு எந்த உணவகத்திலும் இதுவரை கிடைக்கவில்லை.கொஞ்சம் களைப்பை போக்கஒருவர்் தலையைஒருவர் ்அவிழ்த்து்களின் கள்ளமில்லாத உள்ளங்கள் காலத்தால் கடந்து செல்லும்.


விளைந்த நெல்லை அறுவடை செய்யும்போது கும்மி பாட்டும், குலவை சத்தமும், ஊர் எல்லையை தாண்டி வசிக்கும் உறவுகளின் காதில் ஒலிக்கும். தலையில் நெல் கட்டு சுமந்து ஓட்டமும், நடையுமாய் ஓடும் போது நெல்மணிகளின் ஓசையை யாராலும் எந்த ஒரு இசை கருவியாலும் இசைக்கமுடியாதவை,

மார்கழி பணியில் நெல்லுக்கு காவல்காக்க கயத்து கட்டிலுக்கு மேலே வைக்கோலை போர்த்தி கட்டிலுக்கு கீழே ஓலை பாய் விரித்து நெல் பொதியை தலையனையாக்கி தூங்கும் சுகமே சுகம் இந்த சுகம் எங்கும் இல்லை.

கோடை காலத்தில் கோவில் திருவிழாக்களும் பண்டிகைகளும் நிறைந்திருக்கும். வெயிலின் தாக்கத்தை போக்க வீட்டுக்கு முன் ஒரு வேப்ப மரம் இருக்கும். நெல் மூட்டைகளும், மிளகாய் மூட்டைகளும் வீட்டுக்குள்ளே தூங்கும் இவர்களோ முற்றத்தில் தூங்குவார்கள். உழைக்க மறுக்காத உறவுகள், உள்ளத்தால் கறைபடியாத என் உறவுகள், ஒரு நேரத்தில் இருந்தது

கருத்துகள் இல்லை:

குழந்தை வளர்ப்பு

குழந்தைகளை நாம் குழந்தைகளாகவே வளர விடுகிறோமா? என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.  இன்றைய காலகட்டத்தில் தன் குழந்தைகளை வீட்டை விட்...