புதன், 27 மார்ச், 2013

நானும் செல்வமும்



எனது இன்பங்களை எல்லாம்
புறக்க ணித்தேன் !
உன் அறிவுரைக் குடன்பட்டு
என்மீது புகுத்திய
உன் நியதியைப் பின்பற்றி
வாழ்வின் பூரிப்பைத்
துறந்தேன் !
நீதி வழங்கு நீ எனக்கு !
அல்லது
கொடு மரணத்தை
விடுவிக்க என்னை
நியாயமே உனது உன்னத
நெறியான தால் !



என் மீது பரிவு காட்டு
என் ஆத்மாவே !
என் மீது அன்பை
ஏற்றி இருக்கிறாய்
என்னால்
சுமக்க முடியாப் பளுவாய் !
நீயும் அன்பும்
இணை பிரியா வல்லினம் !
ஆனால்
நானும் செல்வமும்
இணை பிரியா பலவீனம் !

தேடித் தேடி அலைகிறேன் ...


வாழ்வில்
கரடு முரடுகள் 
எங்கும் பரவி விரவி 
மலிந்து கிடக்க 
அதிலுலன்று பாடாய் 
படும் வேதனை கண்டு 
விரைந்து வருகிறாய் துணையாய் நீ - நம்பிக்கையே!!!




தேடித் தேடி 
அலைகிறேன் 
நிம்மதியை நாடி -நான்
வாடிவதங்கி நிற்கும் வேளைதனில் 
ஓடி வருகிறாய் உற்ற தோழனாய் நீ 
கோடி நன்றிகள் உனக்காய் 
மேடாய் அடிக்கினும் 
உந்தனக்கு ஈடாய் அமையாது 
இவ்வுலகில் - நம்பிக்கைகே!!!

வெறுப்பாய் இருக்கும் 
இருக்கவே இவ்வுலகில்
தொல்விகள் அவமானங்கள் கண்டு,
பொறுப்பா வாறேன் 
நான் இருப்பாய் உன்னிடம் 
இருக்கும் போது 
ஏனப்பா வெறுப்பாய்
இருக்கிறாய் வாழ்வில் 
என்று கேட்பாய் நீ - நம்பிக்கையே!!!

ஊரும் இல்லை
உறவும் இல்லை இங்கு 
நீ மட்டும் என்றுமே என்னோடு 
நம்பிக்கையே!! 

உனக்காய் ஓர் 
இருவரிகள் 
உரைக்காதிருந்தால் என்
நா'வாய் இருக்காது
இருப்பாய் எனக்காய் என்று 
விருப்பாய் இருக்க இவ்வாழ்வு என்றும் - நம்பிக்கையே!!!

குழந்தை வளர்ப்பு

குழந்தைகளை நாம் குழந்தைகளாகவே வளர விடுகிறோமா? என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.  இன்றைய காலகட்டத்தில் தன் குழந்தைகளை வீட்டை விட்...