புதன், 27 மார்ச், 2013

தேடித் தேடி அலைகிறேன் ...


வாழ்வில்
கரடு முரடுகள் 
எங்கும் பரவி விரவி 
மலிந்து கிடக்க 
அதிலுலன்று பாடாய் 
படும் வேதனை கண்டு 
விரைந்து வருகிறாய் துணையாய் நீ - நம்பிக்கையே!!!




தேடித் தேடி 
அலைகிறேன் 
நிம்மதியை நாடி -நான்
வாடிவதங்கி நிற்கும் வேளைதனில் 
ஓடி வருகிறாய் உற்ற தோழனாய் நீ 
கோடி நன்றிகள் உனக்காய் 
மேடாய் அடிக்கினும் 
உந்தனக்கு ஈடாய் அமையாது 
இவ்வுலகில் - நம்பிக்கைகே!!!

வெறுப்பாய் இருக்கும் 
இருக்கவே இவ்வுலகில்
தொல்விகள் அவமானங்கள் கண்டு,
பொறுப்பா வாறேன் 
நான் இருப்பாய் உன்னிடம் 
இருக்கும் போது 
ஏனப்பா வெறுப்பாய்
இருக்கிறாய் வாழ்வில் 
என்று கேட்பாய் நீ - நம்பிக்கையே!!!

ஊரும் இல்லை
உறவும் இல்லை இங்கு 
நீ மட்டும் என்றுமே என்னோடு 
நம்பிக்கையே!! 

உனக்காய் ஓர் 
இருவரிகள் 
உரைக்காதிருந்தால் என்
நா'வாய் இருக்காது
இருப்பாய் எனக்காய் என்று 
விருப்பாய் இருக்க இவ்வாழ்வு என்றும் - நம்பிக்கையே!!!

கருத்துகள் இல்லை:

கந்தர்வன் சிறு கதைகள்

 தமிழ் வாசகர்கள் மத்தியில் பெரிதும் பேசப்படாத எழுத்தாளர் தான் கந்தர்வன். அவரின் சிறுகதைகள், கவிதைகள் மற்றும் கட்டுரைகள் அத்தனையும் தொழிலாளர்...