திங்கள், 15 அக்டோபர், 2012

உறவுகள் எதை நோக்கி பயணிக்கிறது!



மனித உறவுகள் எதை நோக்கி பயணிக்கிறது!


காலை முதல் மாலை வரை வேலை, வேலை, என இயந்திர வாழ்க்கை, மாத இலக்கு நோக்கி பயணம் என இக்கால மக்களிடையே நீரு பூத்த நெருப்பாகிப் போன மங்கிப் போன மனித உறவுகளே இன்றைய தலையாய பிரச்சனை, மாற்றம் காணப்பட வேண்டிய, தீர்வு தேடப்பட வேண்டியஒன்று. கால ஓட்டத்தில் கரைந்து போய்விட்ட, பணப்பையிலே புகைப்படமாக பதிந்து போய்விட்ட மனித உறவுகளை பற்றியதே இந்த பதிப்பு.








நாள்தோறும் செய்தித்தாள்களில் உறவுகள் குறித்து பல்வேறு செய்திகள் வருகின்றன.

சொத்து தகராறு அண்ணனை கொன்ற தம்பி தலைமறைவு!

சொத்து தகராறு அண்ணனை கொன்ற தம்பி தலைமறைவு!

வேலை வாங்கித் தராததால் தந்தை கொலை! மகன் வெறிச் செயல்!!

தந்தையின் பிணத்தை வீட்டுக்குள் அனுமதிக்க மறுப்பு! பாகப்பிரிவினையில் வஞ்சகம் செய்ததால் மகன் வீட்டைப் பூட்டிச் சென்றார்!

கணவனை கொன்ற மனைவி!

மனைவியை கொலை செய்த கணவன்!

இவ்வாறு பல செய்திகளை தினந்தோறும் ஏதாவது செய்தி தாளில் படித்து கொண்டேதான் இருக்கிறோம், மொத்தத்தில் இந்த உறவுகள் என்பது ஏதோ ஒன்றை எதிர்பார்த்து உருவாக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம். அந்த எதிர்பார்ப்பு அல்லது பலன் கிடைக்காத போது உறவுகள் முறிகிறது. முறிக்கப்படுகிறது. பல நேரங்களில் இது கொலைகளிலும் சென்று முடிகிறது.

உறவுகள் ஒருவரை ஒருவர் அடிமை செய்யவே பார்கிறது அது அறிந்தோ அறியாமலோ நடக்கிறது. . நாம் சொல்வதை செய்யவேண்டும், என்ற எண்ணங்கலால் அவை அன்பு செய்வதாக எண்ணி மற்றவர்களை அடிமை செய்யவே முற்படுகிறது. கருத்து வேறுபாடுகள் இச்செயல்களால் உறவுகளை கருவறுத்து விடுகிறது.

ஒவ்வொருவருக்கும் எல்லை உண்டு . அந்த எல்லைகள் தாண்டபடும் பொழுது அதன் தன்மையை பொறுத்து கருத்து வேறுபாடுகள், சண்டைகள், புறகணிப்புகள் போன்ற செயல்கள் நடக்கிறது, இதை எல்லை தாண்டிய பயங்கரவாதம் என்று கூட சொல்லலாம்.


மனிதகுலம் அறிவு வளர்ச்சிப் பெற்றதிலிருந்து உறவுகள் ஒவ்வொரு சமூகத்திற்கும் ஏற்ப வரையறுக்கப்பட்டு, கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. அதே சமயம், புராதன காலத்தில் இருந்த மனித உறவுகளுக்கும், தற்போதைய நவீன காலத்தில் இருக்கும் மனித உறவுகளுக்கும் இடையில் பெரும் மாறுதல்கள் ஏற்பட்டுள்ளது.சமூக வளர்ச்சிப் போக்கிற்கேற்ப இந்த உறவுகள் தொடர்ந்து மாறுதலுக்கு உட்பட்டு வருகிறது அறிவியல் வளர்ச்சியில் மனிதன் தன்னை உயர்த்திகொன்டாலும் மனதளவில் அழிந்துகொண்டே வருகிறான்.


இன்று மனிதனிடையே போட்டி, பொறாமை, சகமனிதனை இழிவுபடுத்தும் தன்மை ஆகியவை விஞ்சி, ஆறறிவு படைத்த மனிதனை, ஐந்தறிவு- துணையை தேட வைத்துள்ளன. ஐந்தறிவு ஜீவன்கள் காட்டும் சுயநலமற்ற உணர்ச்சிகளும், அன்பான பார்வையும் எந்தவொரு மனிதனிடமிருந்தும் பெறப்படுவதில்லை. கால வெள்ளத்தில் பயணிக்க எந்தவொரு மனிதனுக்கும்,


எந்தவொரு சூழ்நிலையிலும், இன்னொரு மனிதனின் துணை அவசியம். அவ்வாறான துணையை பெற, பிறரையும் தன்னைப் போல் பாவிக்கும் பண்பு அவசியம் வளரவேண்டும்

கருத்துகள் இல்லை:

குழந்தை வளர்ப்பு

குழந்தைகளை நாம் குழந்தைகளாகவே வளர விடுகிறோமா? என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.  இன்றைய காலகட்டத்தில் தன் குழந்தைகளை வீட்டை விட்...