செவ்வாய், 16 அக்டோபர், 2012

என் சிரிப்பு

என்னுடைய
சிரிப்பைப் பார்த்து
கேலியாகச் சிரிக்கிறது
எனது
இன்னொரு சிரிப்பு.
அதுதான் உண்மையென்பது
அதன் வாதம்,
இது தான் உண்மையென்பது
இதன் நியாயம்.
பின்
இரண்டு மூன்றாகி
கூடைக் கணக்காகி
மாலையில்
என்னைப் பின் தொடர்ந்து
துரத்துகின்றன
சிரிப்புப் பேரணிகள்.
எது
உண்மையான சிரிப்பென்று
ஒத்துக் கொள்ள வேண்டுமாம்
நான்.
மாலையில் சிரிக்கிறேன்
வாசலில் நிற்கும்
மழலையைப் பார்த்து.
தீர்ந்து போய் விடுகிறது
பின் தொடர்ந்த
சிரிப்பின் ஒலிகள்

கருத்துகள் இல்லை:

அம்மாவின் ஆறாம் ஆண்டு நினைவு நாள்

 இன்று அம்மாவின் ஆறாம் ஆண்டு நினைவுநாள்! அம்மாவின் நினைவுகள் எத்தனையோ இருந்தாலும், இன்றும் என் மனதை விட்டு நீங்காத சில நினைவுகள்: “என் மகன் ...