சனி, 6 அக்டோபர், 2012

தாய் வீடு


தாய் வீடு 
எனக்கொரு வீடு இருந்தது..
அங்கே எனக்கொரு போர்வை
எனக்கென ஒரு தலையணை
எனக்கென எல்லாவற்றிலும் ஒரு தனியிடம் இருந்தது..
என் தலையணையிடம் நான் நிறைய பேசியிருக்கிறேன்..!
அழுதிருக்கிறேன்..!

தனிமையை அதனோடு தொலைத்திருக்கிறேன்..!

அம்மா என் கன்னத்தில் கன்னம் வைத்து கொஞ்சியிருக்கிறாள்..
அந்த வீடுவிட்டு வருகையில்..!அழுத கண்ணீரையும்
இன்னும் பத்திரப்படுத்திக்கொண்டேயிருக்கிறது அந்த வீடு…!

ஏங்கி அழுது என் கால்மிதிபடும் நாளெதிர்பார்த்து
என் நிம்மதியை இரைஞ்சிய படியே வாழ்கிறது…!
என் வரவை எதிர்பார்த்து நான்கு கைகள் காத்திருக்கிறது..!
புதைபட்ட அவ் வீட்டின் இணக்கத்தை இடைவெளிப் படுத்திய
இச்சமூகத்தை மனம்விட்டு சபித்தால் தானென்ன??


2 கருத்துகள்:

Unknown சொன்னது…

thaai veedu nalla thalaippu thalaippukku en thalai saainthu vanakkam...engal veettin peyarum annai illamthaan...........petrorkalum athe annai illaththilthaan......hahahahahahahaha

Balkarasu சொன்னது…

உங்கள் வருகைக்கு மிக்க நன்றி.
அன்னை இல்லம் என்றும் சந்தோசம் நிறைந்திருக்க எனது வாழ்த்துக்கள்.

குழந்தை வளர்ப்பு

குழந்தைகளை நாம் குழந்தைகளாகவே வளர விடுகிறோமா? என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.  இன்றைய காலகட்டத்தில் தன் குழந்தைகளை வீட்டை விட்...