செவ்வாய், 22 மே, 2018

ஓட்டுக்கு உசுரு .

அறிவொளிக்குப் பாடை கட்டி
அடக்கம் பண்ணிப்புட்டு
புதுக்கல்வியெனப் புரட்டியைக் கொண்டுவந்து
ஊர் கூவி வித்துப்புட்ட!.....

ஊத்திக் கொடுத்தவனுக்கம்
காட்டிக் கொடுத்தவனுக்கும்
உரிமையை வித்து
நாயைப்போல நக்கிப் பொழச்சுக்கிட்ட!.....
ஆறுகளையெல்லாம் ஆலைக்கழிவுகளாக்கி
ஊத்து நீர் உரிமையைப் பறிச்சு
ஆழ்குழாய் துளையிட்டு
உறிஞ்சி வித்துப்புட்ட!.....
உழுது பொழச்சவன்
உரிமையைப் பறிச்சு
வளர்ச்சிப் பாதையென
வணிகம் செஞ்சுப்புட்ட!....
காவேரிக்கு
கல்லணை கட்டிய கரிகாலன்
குல வழியை
தரை தட்ட மண்ணை வெட்டி
காசு பாத்துப்புட்ட!....
என் கண்ணுக்குத் தெரியாம
என் கருவறையை அறுத்து
தங்கத்தைக் கொடுத்து
தாலிகட்டி வச்சுப்புட்ட!.....
செறச்சத்தை அள்ளி
என் சீலையில கட்டிவிட்டு
உன் வயித்துப்பாசி தீர்த்தவன்
நான்தானும் வாய் கிழியப் பேசிப்புட்ட!.....
ஓட்டுப் போட்டப் பாவத்துக்கு
வேட்டு வச்சுத் தீத்துப்புட்ட
என் சுரப்பிகள் எல்லாம்
பறையடுச்சுக் கதறுதடா!.....
-பால்கரசு-

கருத்துகள் இல்லை:

குழந்தை வளர்ப்பு

குழந்தைகளை நாம் குழந்தைகளாகவே வளர விடுகிறோமா? என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.  இன்றைய காலகட்டத்தில் தன் குழந்தைகளை வீட்டை விட்...