புதன், 29 ஏப்ரல், 2020

லூகா மலையாள திரைப்பட விமர்சனம்

நான் பார்த்து ரசித்த சிறந்த மலையாள காதல் திரைப்படம் நான் பார்த்து ரசித்த சிறந்த மலையாள காதல் திரைப்படம் லூகா.
எழுத்தும் இயக்கமும் அருண் போஸ், மிருதுல் ஜார்ஜ்
லூகா (டோவினோ தாமஸ்) புகழ்பெற்ற ஸ்கிராப் கலைஞரான இவரை நிஹா (அஹானா கிருஷ்ணகுமார்) என்ற பெண், படிப்பு ஆராட்சிக்காகச் லூகாவைச் சந்திக்கிறார்....! இது ஒரு வழக்கமான காதல் கதைபோல் இல்லாமல் வித்தியாசமாக நகர்கிறது....! இவ்விருவரின் காதல் கதையை ஒரு திறந்த புத்தகமாகவும், நெறுக்கமான பிணைப்புடன் நகர்கிறது!

படக்காட்சிகள் முழுவதும் நல்ல வெளிசத்துடன் வெளியில் எடுக்கப்பாட்டிருக்கும்.
மற்றொரு காதல் கதை காவல் அதிகாரி அக்பர் (நீத்தின் ஜார்ஜ் ) மற்றும் அவர் மனைவி பாத்திமா (வினிதா கோடி) இருவரின் காதல் கதை படம் முழுவதும் மர்மத்தோடு மழைக் காட்சியோடு தொடர்கிறது....! மழைக் காட்சியில் ஒளிப்பதிவாளரைப் பாராட்டாமல் இருக்கமுடியாது.
லூகா - அவரது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடக்க, காவல் துறைக்குத் தகவல் கொடுக்கப்படுகிறது, முக்கிய விசாரணைக் காவல் அதிகாரி (அக்பர்) காவின் வீட்டைச் சுற்றிப் பார்க்கிறார், எல்லோரும் இது ஒரு தற்கொலை என்றே முடிவு செய்ய....! காவல் அதிகாரி அக்பர் மட்டும் இது ஒரு கொலையாக இருக்கக்கூடும் என்ற சந்தேகத்துடன் நோட்டமிட , முன்னாள் காதலியின் நாட்குறிப்பு ஒன்று கிடைக்க அதை எடுத்துக்கொள்கிறார்.
பெங்களூரில் ஒரு பெண் இதேபோல் மர்மமாக இறந்து கிடந்ததாகத் தகவல் கிடைக்க ( காவின் காதலி ) இந்த இரு மரணங்களுக்கும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத தற்கொலைகளைப் போலத் தோற்றமளித்தாலும், அக்பர் இது ஒரு கொலையாக இருக்கக்கூடும் என்பதற்கான வாய்ப்பைக் கண்டு அதன் பின் செல்கிறார்....!
அக்பர் வழக்கு விசாரணைக்காக எடுத்துச் சென்ற நாடக்குறிப்பை வாசிக்கத்தொடங்குகிறார், அவர் வாசிக்க, வாசிக்க ஒரு அழகான ஓவியத்துடன் ஆழமான காதல் கதை விரிகிறது..!
படத்தில் அக்பரின் வாழ்க்கை ஒரு மர்மமான சோகத்தைத் திரை முழுவதும் தொடர்கிறது....! நாடக்குறிப்பை வாசித்து முடிக்கையில்
அக்பருக்கும் அவர் மனைவிக்கும் இடையிலிருந்த கருத்துவேறுபாடுகள் களைந்து ஒரு நெருக்கமான அன்பை விதைத்து இருவரும் மீண்டும் இணைகிறார்கள்.
படம் பார்த்து முடிக்கையில் ஒரு சோகமான, காதல் நெருக்கம் நம் நெஞ்சில் நின்று நீங்க மறுக்கிறது ....காதலை நேசிப்பவர்களுக்கு இது ஒரு சிறந்த காதல் படம்.
எழுத்தும் இயக்கமும் அருண் போஸ், மிருதுல் ஜார்ஜ்
லூகா (டோவினோ தாமஸ்) புகழ்பெற்ற ஸ்கிராப் கலைஞரான இவரை நிஹா (அஹானா கிருஷ்ணகுமார்) என்ற பெண், படிப்பு ஆராட்சிக்காகச் லூகாவைச் சந்திக்கிறார்....! இது ஒரு வழக்கமான காதல் கதைபோல் இல்லாமல் வித்தியாசமாக நகர்கிறது....! இவ்விருவரின் காதல் கதையை ஒரு திறந்த புத்தகமாகவும், நெறுக்கமான பிணைப்புடன் நகர்கிறது!
படக்காட்சிகள் முழுவதும் நல்ல வெளிசத்துடன் வெளியில் எடுக்கப்பாட்டிருக்கும்.
மற்றொரு காதல் கதை காவல் அதிகாரி அக்பர் (நீத்தின் ஜார்ஜ் ) மற்றும் அவர் மனைவி பாத்திமா (வினிதா கோடி) இருவரின் காதல் கதை படம் முழுவதும் மர்மத்தோடு மழைக் காட்சியோடு தொடர்கிறது....! மழைக் காட்சியில் ஒளிப்பதிவாளரைப் பாராட்டாமல் இருக்கமுடியாது.
லூகா - அவரது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடக்க, காவல் துறைக்குத் தகவல் கொடுக்கப்படுகிறது, முக்கிய விசாரணைக் காவல் அதிகாரி (அக்பர்) காவின் வீட்டைச் சுற்றிப் பார்க்கிறார், எல்லோரும் இது ஒரு தற்கொலை என்றே முடிவு செய்ய....! காவல் அதிகாரி அக்பர் மட்டும் இது ஒரு கொலையாக இருக்கக்கூடும் என்ற சந்தேகத்துடன் நோட்டமிட , முன்னாள் காதலியின் நாட்குறிப்பு ஒன்று கிடைக்க அதை எடுத்துக்கொள்கிறார்.
பெங்களூரில் ஒரு பெண் இதேபோல் மர்மமாக இறந்து கிடந்ததாகத் தகவல் கிடைக்க ( காவின் காதலி ) இந்த இரு மரணங்களுக்கும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத தற்கொலைகளைப் போலத் தோற்றமளித்தாலும், அக்பர் இது ஒரு கொலையாக இருக்கக்கூடும் என்பதற்கான வாய்ப்பைக் கண்டு அதன் பின் செல்கிறார்....!
அக்பர் வழக்கு விசாரணைக்காக எடுத்துச் சென்ற நாடக்குறிப்பை வாசிக்கத்தொடங்குகிறார், அவர் வாசிக்க, வாசிக்க ஒரு அழகான ஓவியத்துடன் ஆழமான காதல் கதை விரிகிறது..!
படத்தில் அக்பரின் வாழ்க்கை ஒரு மர்மமான சோகத்தைத் திரை முழுவதும் தொடர்கிறது....! நாடக்குறிப்பை வாசித்து முடிக்கையில்
அக்பருக்கும் அவர் மனைவிக்கும் இடையிலிருந்த கருத்துவேறுபாடுகள் களைந்து ஒரு நெருக்கமான அன்பை விதைத்து இருவரும் மீண்டும் இணைகிறார்கள்.
படம் பார்த்து முடிக்கையில் ஒரு சோகமான, காதல் நெருக்கம் நம் நெஞ்சில் நின்று நீங்க மறுக்கிறது ....காதலை நேசிப்பவர்களுக்கு இது ஒரு சிறந்த காதல் படம்.

கருத்துகள் இல்லை:

குழந்தை வளர்ப்பு

குழந்தைகளை நாம் குழந்தைகளாகவே வளர விடுகிறோமா? என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.  இன்றைய காலகட்டத்தில் தன் குழந்தைகளை வீட்டை விட்...