ஞாயிறு, 24 மே, 2020

சிலையும் நீ சிற்பியும் நீ- மனச்சிறையில் சில மர்மங்கள்

நாகூர் ரூமி - சிலையும் நீ சிற்பியும் நீ

ரூபியின் கட்டுரைகள் மனமென்பது மிகப்பெரிய சக்திவாய்ந்ததாகவும், நாம் எதை அடைய நினைக்கிறமோ அதன்மீது தீர்க்கமான நம்பிக்கை வைத்தோமானால் அதனை அடைவது எளிது என்றும். நம் எதிர்காலத்திற்கான விதைகளை நம் மனமே நமக்குள் தூவுகிறது என்றும், நம் மனதை சரியாக அணுகினால், சரியாகக் கையாண்டால் நம் விருப்பங்களை எளிதில் நிறைவேற்றிக்கொள்ள முடியும் என்ற தன்னம்பிக்கை விதைக்கிறது.!
மனம் வலிமையானதாக இருந்தால் எதையும் அடைவது சாத்தியம் என்பதற்கு ஆதாரமாக பல சம்பவங்களையும், பல வெற்றிபெற்ற மனிதர்களையும் ஆதாரமாக ரூமியின் கட்டுரைகள் நமக்கு விளக்குகிறது...! மொத்தத்தில் நம் சிந்தனைகள் அத்தனையும் நம் மூளைக்குள் இருந்தாலும், மனம் ஒன்றுதான் நம்மை கட்டுப்படுத்துவதாகவும், நம் மனதை ஒருநிலைப்படுத்தினால் வெற்றிபெறலாம் என்பதையே அறிவுறுத்துகிறது.

மருத்துவர் ஷாலினியின் - மனச்சிறையில் சில மர்மங்கள்
மனம் என்பது என்ணங்களின் கூட்டமைப்பு, நம் ஆழ்மனதில் தோன்றும் எண்ணங்களே நம்மை வழிநடத்திச் செல்வதாகவும், மனதால் முடியாதது எதுவுமில்லை என்கிறது. அதே சமயத்தில் மனம் என்பது ஒரு அற்புதமான கருவி அதை சரியாக கையாண்டால் அதைப்போல் அதிசயமான உறுப்பு வேறொன்றுமில்லை என்கிறது.
இதற்கு ஆதாரமாக பல சம்பவங்களையும், உடல்ரீதியாக ஏற்படும் ரசாயன மாற்றத்தையும், அதற்கான தீர்வையும் கொடுக்கிறது. மொத்தத்தில் சரியான தூக்கம், சரியான உணவு, மன அழுத்தமின்றி இருந்தால் மனதை எளிமையாகக் கையாளலாம் என்ற தீர்வை தந்திருக்கிறார் மருத்துவர் ஷாலினி. மனதை உங்கள் கட்டுக்குள் வைத்துக்கொண்டால் இந்த உடலை வெற்றியோடு வழிநடத்தலாம் என்கிறார்.
இந்த இருவரின் கட்டுரைகள் அறிவியலும் ஆன்மீகமும் சேர்ந்து ஒன்றை மட்டும் நமக்கு ஆழமாக வலியுறுத்துகிறது. “மனதை கையாள்வது எப்படி”
இந்த இக்கட்டான காலகட்டத்தில் சோகம், மன அழுத்தம், மனக்குழப்பம், பயம், தூக்கமின்மை ஏற்படுவது இயல்புதான். எனவே எதிர்மறை எண்ணங்களை சிந்திக்காமல் எப்போதும் நல்ல எண்ணங்களை ஆளுபவராய் நீங்கள் முயற்சி செய்தால் கெட்டவற்றை நெருங்கவிடாமல் அமைதியான மன நிறைவை அடையலாம் என இதுபோன்ற கட்டுரைகள் நமக்கு உணர்த்துகிறது.

கருத்துகள் இல்லை:

குழந்தை வளர்ப்பு

குழந்தைகளை நாம் குழந்தைகளாகவே வளர விடுகிறோமா? என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.  இன்றைய காலகட்டத்தில் தன் குழந்தைகளை வீட்டை விட்...